ஆந்திரா பருப்பு பொடி
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,ஆந்திரா பருப்பு பொடி !! நாங்கள் சென்னையிலிருந்த பொழுது அங்கே உள்ள ஒரு ஆந்திர மெஸ்ஸில் பருப்பு பொடி அருணுக்கு மிகவும் பிடிக்கும்.நான் பல முறை முயற்சி செய்தும் அந்த சுவை எனக்கு கிடைக்கவில்லை .கடைசியாக இந்த ரெசிபி சரியாக வந்தது , அதே சுவை என்று கணவர் ஒப்புக்கொண்டார்(இறுதியாக!!) .பருப்புப்பொடியை நான் இரண்டு வாரங்களுக்கு மேல் வைப்பதில்லை , பருப்புப்பொடி மாதத்திற்கு வைத்தாலும் கெட்டுப்போகாது ஆனால் எனக்கு அவ்வப்போது அரைக்கும் பருப்பு பொடியின் மணம் பிடிக்கும் என்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அரைத்துவைத்துக்கொள்வேன்.
சுவையான ஆந்திர பருப்பு பொடி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துவரம் பருப்பு – 3/4 கப்.
பொட்டுக்கடலை / உடைத்தக்கடலை – 1/2 கப்
பூண்டு – 5 பல்
சீரகம் -1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 6
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி .
கருவேப்பில்லை – ஒரு கொத்து
உப்பு – தேவையானஅளவு
நெய் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை :
அ) எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் பருப்பு , கடலை , பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக குறைந்த சூட்டில் பொன்னிறமாக ,மணம் வரும்வரை வறுத்துவைத்துக்கொள்ளவும்.
இ) வாணலியில் நெய் சேர்த்து வரமிளகாய்ஐ நெய்யில் வறுத்து , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் .
ஈ) மேலே வறுத்த அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு , பொருங்காயம் அனைத்தையும் வரமிளகாயுடன் சேர்த்து கலக்கி ஆறவிடவும்.
உ) அறியபின்பு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
ஊ) சூடான சாதத்திற்கு , நெய்யுடன் பரிமாற சுவையாக இருக்கும் .
குறிப்பு :
அ ) எப்பொழுதும் குறைத்த சூட்டில் வறுக்கவும் , இதனால் சுவை கூடுவதுடன் , சமமாக வறுக்கஇயலும்.
ஆ) நெய்க்கு பதிலாக வெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment