TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,சென்ற வாரம் , எனது வீட்டில் சட்னி செய்வதற்கு ஒன்றுமே இல்லை , ஒரு சிறிய தக்காளி ,மற்றும் சில பூண்டு மட்டுமே இருந்தது .அதனால் கடலை பருப்பு சட்னி செய்தேன் .
மிகவும் சுலபமான சட்னி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி .
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி .
தக்காளி – 1 சிறியது .
பூண்டு – 4 பல்.
வரமிளகாய் – 2 .
உப்பு – தேவையானவை .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி .
தேங்காய் – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை – சிறிது .
உளுந்தம் பருப்பு – 1 / 2 தேக்கரண்டி .
வரமிளகாய் – 1 .
செய்முறை :
அ) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடலை பருப்பு , உளுந்தம் பருப்பு,வரமிளகாய் , பூண்டு சேர்த்து , குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
இ) வாணலியில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
உ) மிகவும் மைய அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அ) குறைந்த சூட்டில் எப்பொழுதும் வறுக்கவேண்டும்.
ஆ) தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம்.
இ) தேங்காய் சேர்ப்பதாக இருந்தால் ,அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.
No comments:
Post a Comment