ஆம்பூர் சிக்கன் தம் பிரியாணி
Posted in : BRIYANI AND FRIED RICE on by : Saranya Arun Tags: AMBUR CHICKEN DUM BRIYANI, BRIYANI RECIPES, CHICKEN BRIYANI, CHICKEN RECIPES, FESTIVAL RECIPES, LUNCH RECIPES, RAMZAN RECIPESTO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,ஆம்பூர் தம் பிரியாணி !! மிகவும் குறைந்த பொருட்களை வைத்து எளிமையாக செய்யும் பிரியாணி ஆனால் சுவையும் , மணமும் வீடு முழுவதும் பரவியிருக்கும்.
நான் இதற்கு முன்னாள் இரண்டு முறை தம் பிரியாணி முயற்சி செய்துள்ளேன் ஆனால் திருப்தியாக இல்லை , காரணம் சரியான பாத்திரம் இல்லாததுதான் .இம்முறை பொள்ளாச்சி சென்றிந்த பொழுது இந்த பாத்திரத்தை எடுத்து வந்தேன் , கனமான பாத்திரம் தம் பிரியாணி செய்வதற்கு ஏற்றதாகும்.
நான் இந்த பாரம்பரிய பிரியாணி முறையை ஒரு காணொளியில் கண்டேன் , ஆம்பூரில் இருந்த ஒரு பாரம்பரிய சமையல் கலை நிபுணர் செய்து காட்டினார் . ஆம்பூர் பிரியாணி செய்வதற்கு சீராக சம்பா அரிசி உபயோகப்படுத்தப்படுகிறது , காரணம் அது சீரணத்திற்கு மிகவும் நல்லது என்பதால்.மிகவும் எளிதாக குறைந்த பொருட்களை வைத்து செய்தார் .
சுலபமான , அருமனையான ஆம்பூர் பிரியாணி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சீராக சம்பா அரிசி – 2 கப்.
சிக்கன் -1/2 கிலோ
வெங்காயம் – 1( பெரியது ).
வர மிளகாய் – 8
இஞ்சி விழுது – 2தேக்கரண்டி .
பூண்டு விழுது -2 தேக்கரண்டி
தயிர் – 1/2கப்
நெய் ( அல்லது ) எண்ணெய் – 5தேக்கரண்டி
எலுமிச்சை – 1/2 மூடி
மல்லி இலை – 1/2 கப்
புதினா இலை – 1/2 கப்.
பட்டை – 5
கிராம்பு -12
ஏலம் – 2
தண்ணீர் – 6கப் +1 கப்.
உப்பு – தேவையானஅளவு
செய்முறை :
அ) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) மிளகாயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
இ) ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் கொதிக்கவைக்கவும் , அத்துடன் கழுவிய அரிசி ,உப்பு சேர்த்து 90 % வேகும் வரை வேகவிடவும்.அரிசியை விரல்களால் நசுக்கினால் சிறிது குருணையாக இருக்கவேண்டும் ஆனால் நசுங்கிவிடும்.இந்த பக்குவத்தில் தண்ணீர் வடித்து அரிசியை தனியே வைக்கவும்.
ஊ) பின்பு மிளகாய் விழுது , மீதமிருக்கும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போய் , எண்ணெய் திரண்டு வரும்வரை வதக்கவும் .
ஓ) 20 நிமிடத்திற்கு பிறகு , பாத்திரத்தை திறந்து சாதம் நன்றாக வெந்துஉள்ளதா என்று பார்த்து இல்லையென்றால் ஒரு கிளறு கிளறி மீதும் ஒரு பத்து நிமிடம் மூடி வைத்து வேகவிடவும் ( இவ்வாறு கிளறுவதால் அடிப்பாகம் குழைந்து போகாமல் இருக்கும் ).
ஓஓ) பிரியாணி வெந்தவுடன் ஒரு முறை கிளறி சூடாக பரிமாறவும்.
ஒவ்) நான் சிக்கன் சுக்கா , கத்திரிக்காய் பச்சடி , தயிர் பச்சடியுடன் பரிமாறினேன்.
No comments:
Post a Comment